அஜித் செல்பி விவகாரம் குறித்து விஜய் டிவி பிரபலம் பதிவிட்ட வைரல் டூவிட்!

Update: 2021-04-07 12:11 GMT

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவிட்டனர்.அந்தவகையில் நேற்று நடிகர் அஜித் மனைவி ஷாலினியுடன் அவரது ஜனநாயக கடமையை ஆற்ற வந்த போது ரசிகர்கள் பலர் பார்க்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சிலர் அவருடன் செல்பி எடுக்க முயற்சித்தனர் என்பதும், ஒரு கட்டத்தில் தனது அருகே செல்பி எடுத்துக் கொண்ட ரசிகர் ஒருவரின் மொபைல் போனை பிடுங்கி சில நிமிடங்கள் கழித்து அந்த ரசிகரை அழைத்து அறிவுரை கூறி செல்போனை திருப்பிக் கொடுத்தார் என்பதும் அறிந்ததே.


இதுகறித்த வீடியோக்கள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் இது குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலை தளங்களில் தெரிவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் விஜய் டிவியின் டிடி என்கிற திவ்யதர்ஷினி இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது:


அஜித் சார் நடத்தப்பட்ட விதம் வருத்தமளிக்கிறது, அவர் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தார், அவர் அவரது குடும்பத்தினருடன் வாக்களிக்கும் அடிப்படை உரிமையைப் பயன்படுத்தி கொண்டிருக்கும்போது, பதிலாக நாம் அவருக்கு அமைதியைக் கொடுக்க வேண்டாமா அஜித் சார், நீங்க மிகவும் பொறுமையையுடன் இருந்தீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News