"யாரையும் காயப்படுத்துவது எங்கள் நோக்கமில்லை" - Family Man தொடர் குறித்து மனம் திறக்கும் மனோஜ் பாஜ்பாய்!

Update: 2021-06-15 09:15 GMT

"யாரையும் காயப்படுத்துவதற்காக நாங்கள் எதையும் செய்யவில்லை" என ஃபேமிலி மேன் 2 தொடர் பற்றி அதன் கதாநாயகன் மனோஜ் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.


அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இணைய தொடர்களில் அதிக வரவேற்பை பெற்ற தொடர் 'தி ஃபேமிலி மேன்' அதனுடயை 2'ம் பாகம் சமீபத்தில் வெளியாகியது. இலங்கை தமிழர்கள் பற்றியும், அவர்களது போராட்ட வாழ்வை பற்றியும் தவறாக சித்தரிப்பதாக கூறி தமிழ்நாட்டில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் கடந்த 4'ம் தேதி அமேசோன் ப்ரைம் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது இந்த தொடர்.

இந்நிலையில் இந்த தொடர் பற்றி இதன் கதாநாயகனாக நடித்திருந்த மனோஜ் பாஜ்பாய் கூறுகையில், "நாங்கள் ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஒவ்வொரு மனிதருடைய நம்பிக்கையையும், கலாச்சாரத்தையும் மதிக்கிறோம். யாரையும் காயப்படுத்துவதற்காக நாங்கள் எதையும் செய்யவில்லை. முதல் சீசனிலும் சரி, இந்த சீசனிலும் சரி நாங்கள் அரசியல் குறித்துப் பேசவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதற்கே உரிய மனிதத்தன்மையுடன் அணுகி உள்ளோம்.


அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களுடைய சொந்தக் கதையில் ஹீரோதான். இப்போது இத்தொடர் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில் நீங்கள் பயந்த அளவுக்கு அது இல்லை என்பதை நீங்கள் எங்கோ ஓரிடத்தில் உணர்கிறீர்கள். அது உங்களைப் பற்றியும் உங்கள் நம்பிக்கைகளைப் பற்றியும் மிகவும் மரியாதையான வகையில் அன்புடன் பேசுகிறது" என கூறியுள்ளார்.

Similar News