முதன் முறையாக ₹25 கோடி மதிப்பில் வியாபாரமாகியுள்ளது நயன்தாரா நடித்த படம். ஹீரோவே இல்லாத படத்துக்கு இத்தனை விலையா என அதிர்ச்சி அடைந்துள்ளனர் கோலிவுட் சீனியர்கள்.
இயக்குனர் மிலிந்த ராவ் இயக்கத்தில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்துள்ள படம் நெற்றிக்கண். கொரியன் படமான பிளைன்ட் என்ற படத்தின் கதையை தழுவியது.
இப்படத்தில் படத்தில் கண்பார்வை இல்லாதவராக நயன்தாரா நடித்துள்ளார். ஓ.டி.டி தளத்திற்காக இப்படம் ₹25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.