30'வது படத்தை பான்-இந்தியா படமாக தயாரிக்க முடிவு செய்த ஜூனியர் என்.டி.ஆர்

Update: 2022-04-19 06:45 GMT

ஜூனியர் என்.டி.ஆர் தனது 30வது படத்தை பிரம்மாண்டமாக பான்-இந்தியா படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்.





தற்பொழுது தென்னிந்திய திரை உலகம் இந்திய அளவில் படங்கள் வெளியீடு செய்வதே பிரபலமாகி வருகிறது, சமீபத்தில் வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் படங்களே இதற்கு சான்று. இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் தனது 30வது படத்தை பான்-இந்தியா படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்.





இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் ஐந்து மொழிகளில் படத்தை தயாரித்து வெளியிடலாம் என ஜூனியர் என்.டி.ஆர் தரப்பு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் அறிவிப்பும் இந்த கோடை விடுமுறையில் வெளியிடப்படும் எனவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News