500 கோடி வசூலை நெருங்கும் 'கே.ஜி.எப் 2' - வசூல் சக்கரவர்த்தியான ராக்கி பாய்

Update: 2022-04-17 08:30 GMT

உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலைக் கடந்து 500 கோடி வசூலை நெருங்கி வருகிறது 'கே.ஜி.எப் 2' திரைப்படம்.




இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீனிதி ஷெட்டி சஞ்சய் தத், ரவீனா தாண்டன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'கே.ஜி.எப் 2', வெளியான அனைத்து மொழிகளிலும் மிகப் பெரும் வெற்றியடைந்த இப்படத்தை பார்த்து இந்திய திரையுலகமே அதிர்ந்துள்ளது. 'கே.ஜி.எப் 2' இந்தியா முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியான படம், இந்தியா அல்லாத பிற நாடுகளிலும் பல திரைகளில் வெளியாகியுள்ளது. வெளியான நாள் முதலே வசூலை வாரிக்குவித்த இப்படத்தின் வசூல் பற்றிய தகவல்கள் மலைக்க வைக்கின்றன.




ஹிந்தி மொழியில் இரண்டே நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்த 'கே.ஜி.எப் 2', இந்திய அளவில் இதுவரை 240 கோடி வசூலைக் கடந்து உள்ளதாக படத் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கும்போது படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த ரீதியில் சென்றால் இன்றும், நாளையும் சேர்த்து இப்படத்தின் வசூல் 500 கோடியைத் தொட்டுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கன்னடத் திரையுலகில் வெளியான ஒரு படம் இந்த அளவிற்கு வசூலை குவித்து வருவது இதுவே முதல் முறையாகும்.

Tags:    

Similar News