நடிகர் பாக்யராஜ் மற்றும் மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா தொற்று உறுதி.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர்.

Update: 2021-05-07 08:16 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். அதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி மக்கள் பிரதிநிதிகள், சினிமா பிரபலங்கள், உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இது பற்றி நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: எனது பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி அவர்கள் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் எங்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News