வைகை புயல் வடிவேலுவுக்கு கொரோனா வைரஸ்!

நடிகர் வைகை புயல் வடிவேலுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-24 11:56 GMT

நடிகர் வைகை புயல் வடிவேலுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் முன்னணியாக விளங்கி வருபவர் நடிகர் வடிவேலு. இவர் அனைத்து ஸ்டார் நடிகர்கள் மட்டுமின்றி புதிய நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவருக்கு சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை ரசிகர்கள் உண்டு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்நிலையில், நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்திற்கான இசையமைக்கின்ற பணிகள் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழு லண்டன் சென்றிருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியதால் அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் நடிகர் வடிவேலுவுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவர் சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டி சினிமாத்துறையினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Source: Puthiyathalimurai

Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News