சட்டமன்ற தேர்தலில் நடிகை ராதிகா போட்டியிடுவார்.. சரத்குமார் வைத்த சஸ்பென்ஸ்.!

சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக நடிகரும் அக்கட்சியின் தலைவருமான சரத்குமார் தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார்.

Update: 2021-03-02 11:54 GMT

சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக நடிகரும் அக்கட்சியின் தலைவருமான சரத்குமார் தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார்.




 


இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு இந்த தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. நாளை நடைபெறுகின்ற பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

அதே போன்று இரண்டு தொகுதிகளுக்காக நாங்கள் கூட்டணி வைத்து போட்டியிட மாட்டோம். இந்த தேர்தலில் தனித்து நின்று பலத்தை காட்டுவோம். மேலும், நடிகை ராதிகா தென்மாவட்டத்தில் போட்டியிடுவது பற்றி பொதுக்குழு கூட்டத்தில் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என கூறினார்.


 



அப்படி அவர் போட்டியிடும் பட்சத்தில் திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Tags:    

Similar News