மீண்டு சிக்கலில் 'அந்நியன்' - போர்கொடி தூக்கும் தயாரிப்பாளர் !

Cinema News.

Update: 2021-09-19 07:15 GMT

இயக்குனர் ஷங்கரின் படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.


கடந்த 2005'ம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில், சுஜாதா எழுத்தில், விக்ரம் நடிப்பில் வெளிவந்த படம் 'அந்நியன்', மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்தை ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். தற்பொழுது இப்படத்தை இந்தியில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க இயக்கப்போவதாக அறிவித்திருந்தார் ஷங்கர்.




 


அந்நியன் படத்தின் கதைக்கான உரிமை தன்னிடம் உள்ளது என்றும், தனது அனுமதி பெறாமல் இந்தியில் ரீமேக் செய்ய முடியாது என்றும் அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார்.





 


 


இந்நிலையில் இப்படத்தை ஷங்கர் இயக்கப்போவதாக அறிவித்திருந்த நிலையில், தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தானும் இப்படத்தை வேறு சில நடிகர்களை வைத்து தயாரிக்கப்போவதாக அறிவித்துள்ளார். இது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News