அர்ச்சனாவிடம் சவால் விட்ட ஆரி - கடும் கோபத்தில் ரம்யா.!

அர்ச்சனாவிடம் சவால் விட்ட ஆரி - கடும் கோபத்தில் ரம்யா.!

Update: 2020-12-15 15:12 GMT

பிக்பாஸ் வீட்டில் 72வது  நாட்களை கடந்து கொண்டிருக்கும் வகையில்  பல சுவாரசியமான நிகழ்வுகளும் பிரச்சினைகளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. கடந்த வாரம் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.  பல நாட்கள் கடந்தும் வீட்டில் ஈசியான டாஸ்க் கொடுத்தாலும் அதனை போட்டியாளர்கள் ஸ்போர்ட்டிவ்வாக விளையாடாமல் பிரச்சனை செய்து விளையாடுவதே போட்டியாளர்களின் எண்ணமாக உள்ளது.

இந்த நான்காவது சீசனில் ஒரு டாஸ்க் கூட கடினமாக  விளையாடியதாக தெரியவில்லை என்பதுதான் பார்வையாளர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. ஏனெனில் இன்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கோழிப் பண்ணை டாஸ்க்கிலும் கோழிகள் அணி மற்றும் நரிகள் அணிகளுக்கு இடையே பிரச்சினை வந்து உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் குறிப்பாக ஆரி மற்றும் அர்ச்சனா இந்த டாஸ்க் எப்படி விளையாடுவது என்பது குறித்து காரசாரமாக வாதம் செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் எப்படித்தான் விளையாட வேண்டும் என்று சொல்லுங்கள் என அர்ச்சனா ஆவேசமாக கேட்க நான் எப்படி விளையாடுகிறேன் என்று பாருங்கள் என்று சவால் விடும் வகையில் ஆரி சொல்கிறார். 

இந்த வாதத்தின்போது ரம்யா மட்டும் அர்ச்சனாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்பதும் மற்ற போட்டியாளர்கள் வழக்கம்போல் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவருக்கு ஸ்பெஷல் பவர் இருப்பதால் அந்த ஸ்பெஷல் பவரை பெறுவதற்கு அர்ச்சனா செய்யும் முயற்சிகளும் அதனை முறியடிக்க ஆரி செய்யும் முயற்சிகளும் டாஸ்க்கில் தெளிவாக தெரிகிறது.அந்த ஸ்பெஷல் பவர் யாருக்கு கிடைக்கிறது என்று இன்றைய நிகழ்ச்சியில்  காண்போம்.

null



 

Similar News