ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா !

Cinema News.

Update: 2021-08-22 05:15 GMT

நடிகை நயன்தாரா புதுச்சேரியில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார்.




 


இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக நடிகை நயன்தாரா தான் தங்கியிருந்து ஹோட்டலில் இருந்து படப்பிடிப்புக்கு செல்லும் போது திடீரென ரசிகர்கள் கூட்டம், அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் ஏறி செல்ல முடியாமல் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி இருக்கிறார். இதையடுத்து நயன்தாராவின் பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர்.




 


 


இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News