தற்கொலைக்கு முன்பு சித்ரா கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி.. தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ.!

தற்கொலைக்கு முன்பு சித்ரா கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி.. தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ.!

Update: 2020-12-15 13:06 GMT

கடந்த டிசம்பர் 9ம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலமாக தமிழக மக்களின் இதயங்களில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து பெண்களுக்குமே சித்ராவை பிடிக்கும் என்றால் அது மிகையாகாது. ஆனால் சித்ரா தற்கொலை செய்துகொண்டதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், சித்ராவின் கணவரால்தான் தற்கொலை செய்ததாக போலீசார் ஹேமந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தங்களின் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

https://youtu.be/bna304kJA-4

சித்ரா கடைசியாக பங்குபெற்றது ஸ்டார் மியூசிக்  என்ற நிகழ்ச்சி தான் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அந்நிகழ்ச்சியின் புரொமோ வீடியோவை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

Similar News