கொரோனா தொற்றால் நடிகர் பால சரவணனின் தந்தை உயிரிழப்பு.!
தமிழில் வேதாளம், அதே கண்கள், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் பால சரவணன் நடித்துள்ளார். இவர் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
தமிழில் வேதாளம், அதே கண்கள், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் பால சரவணன் நடித்துள்ளார். இவர் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இவரது தந்தை எஸ்.ஏ.ரெங்கநாதன் 60, கடந்த சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பால சரவணனின் தந்தை மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.