சூரி விட்டு திருமணத்தில் களவு போன நகை - ஒருவர் கைது !

Cinema News.

Update: 2021-09-14 09:30 GMT

சூரி வீட்டு திருமண விழாவில் நகை களவு போனதாக அளிக்கப்பட்ட புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.




 


நடிகர் சூரியின் அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9ம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.




 


இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், தற்போது காணாமல் போன 10 சவரன் நகையை மீட்டுள்ளதோடு, விக்னேஷ் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News