போதை வழக்கில் ராணா, ரகுல் ப்ரீத் - அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம் !

Cinema News

Update: 2021-08-26 07:15 GMT

தெலுங்கு திரையுலகில் போதைப்பொருள் வழக்கில் ராணா, ரவிதேஜா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.




 


தெலுங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017 ஆம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில், பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், ரவி தேஜா, நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட 12 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. இந்த வழக்கில், 62 பேர் விசாரணை செய்யப்பட் டனர்.




 


தற்பொழுது நடிகை ரகுல் பிரீத் சிங், ராணா, ரவிதேஜா இயக்குனர் புரி ஜெகந்நாத், நடிகை சார்மி, முமைத் கான் உள்ளிட்ட பலருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரகுல் பிரீத் சிங் செப்டம்பர் 6 ஆம் தேதியும் ராணா செப்டம்பர் 8ஆம் தேதியும், ரவி தேஜா செப்டம்பர் 9 ஆம் தேதியும் இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News