என்னை ஜெயிக்க வைத்தால் பத்து கோடி ! - தெலுங்கு திரையுலகை திரும்பி பார்க்க வைத்த பிரகாஷ்ராஜ் !

Cinema News.

Update: 2021-09-14 09:45 GMT

தேர்தலில் ஜெயிக்க வைத்தால் பத்து கோடி ரூபாய் நன்கொடை தருவேன் என கூறி தெலுங்கு திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.




 


தெலுங்குத் திரையுலகில் நடிகர் சங்கத்திற்கென 'மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்' என்ற சங்கம் உள்ளது. சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணிக்கும், மஞ்சு விஷ்ணு தலைமையிலான அணிக்கும்தான் கடுமையான போட்டி உள்ளது. ஏற்கனவே பிரகாஷ்ராஜ் நடிகர் சிரஞ்சீவி அதரவு பெற்றவர் என அனைவரும் கூறி வரும் நிலையில் தற்பொழுது ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.




 


இரு தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கர் உறுப்பினர்கள் பலருடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார் பிரகாஷ்ராஜ். அப்போது அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தால் சங்கத்திற்காக 10 கோடி ரூபாயை நன்கொடை தருவதாக அறிவித்தார். இது தெலுங்கு திரையுலகத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Tags:    

Similar News