18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்த தனுஷ், ஐஸ்வர்யா!

Update: 2022-01-18 04:14 GMT

தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் பிரபலமானவராக வலம் வருபவர் தனுஷ், இவர் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

நடிகர் தனுஷ் பாலிவுட், ஷாலிவுட், தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகராக மட்டுமின்றி டைரக்டர், பாடகர் என்று அனைத்திலும் சாதனை படைத்து வருகின்றார்.

இந்நிலையில், தங்களுடைய 18 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வருதாக தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் அறிவித்துள்ளனர். இரண்டு பேரும் அறிவிப்பில் கூறியிருப்பதில், நாங்கள் 18 ஆண்டுகளாக நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணத்தில் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என்று அனைத்துமே இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். எனவே இருவரும் பரஸ்பரம் முடிவு செய்தோம். அதில் இரண்டு பேரும் பிரிகிறோம். எங்களின் தனிமனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Source: Twiter

Image Courtesy:The New Indian Express

Tags:    

Similar News