நடிகை ராஷ்மிகாவை பார்க்க 900 கி.மீ. பயணித்து குடகு வரை சென்று பார்க்காமல் திரும்பிய ரசிகர்.!

தெலங்கானாவில் இருந்து ராஷ்மிகாவின் இல்லம் அமைந்துள்ள கர்நாடகா மாநிலம், குடகு பகுதி வரை சுமார் 900 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். செல்லும், வழி முழுவதும் நடிகை விலாசத்தை கேட்டு சென்றுள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த சிலர் போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.

Update: 2021-06-24 05:10 GMT

கொரோனா ஊரடங்கிலும் நடிகை ராஷ்மிகா மந்தனாவை பார்ப்பதற்காக அவரது ரசிகர் ஒருவர் 900 கிலோ மீட்டம் பயணம் செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தெலங்கானாவை சேர்ந்தவர் ஆகாஷ் திரிபாதி. இவர் நடிகை ராஷ்மிகாவின் மிகத் தீவிர ரசிகர் ஆவார்.




 


இந்நிலையில், தெலங்கானாவில் இருந்து ராஷ்மிகாவின் இல்லம் அமைந்துள்ள கர்நாடகா மாநிலம், குடகு பகுதி வரை சுமார் 900 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். செல்லும், வழி முழுவதும் நடிகை விலாசத்தை கேட்டு சென்றுள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த சிலர் போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.




 


இந்த தகவலை தொடர்ந்து அந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது குடகு பகுதியில் ஊரடங்கு அமலில் இருப்பதால், தற்போது யாரும் அங்கு செல்ல முடியாது என தெரிவித்துள்ளனர். இதனை கேட்டுக்கொண்ட ரசிகர் மீண்டும் நடிகை ராஷ்மிகாவை பார்க்காமல் வீடு திரும்பியுள்ளார். இந்த செய்தி தற்போது கன்னட தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News