மகளை அடித்து கொலை செய்துவிட்டார் ஹேமந்த் ரவி.. நடிகை சித்ராவின் தாய் பரபரப்பு பேட்டி.!

மகளை அடித்து கொலை செய்துவிட்டார் ஹேமந்த் ரவி.. நடிகை சித்ராவின் தாய் பரபரப்பு பேட்டி.!

Update: 2020-12-10 13:42 GMT

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடைபெற்ற சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை நிறைவு பெற்று அவரின் குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீரியலில் ரொம்ப பிசியாக இருப்பவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் நேற்று அதிகாலையில் தற்கொலை செய்த் கொண்டதாக தகவல் வெளியவந்தது.

இதனை தொடர்ந்து அவரது உடல் சென்னை நசரத் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. அவரது கன்னத்தில் காயம் இருந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் சித்ராவின் பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தாய் விஜயா, என் பொண்ணு தற்கொலை செய்துகொள்ளும் பெண் இல்லை. தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களையும் கூட தடுக்கும் பண்பு உடையவள். அவள் மிகவும் தைரியமான பெண்.

நள்ளிரவு 2 மணி என்றால் கூட வெளியில் தனியாகச் சென்றுவிட்டு வருவாள். என் மகளை ஹேமந்த் ரவி தான் அடித்து கொலை செய்து விட்டான். போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என கண்ணீர் விட்டு கூறியுள்ளார்.

Similar News