செல்வராகவன் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

செல்வராகவன் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

Update: 2021-02-08 17:59 GMT

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்  இயக்குனர் செல்வராகவன். இவர் பல படங்களை இயக்கி வரும் நிலையில் நீண்ட காலத்திற்கு முன் உருவான திரைப்படம் ரிலீஸ் செய்வதற்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் எஸ்ஜே.சூர்யா  கதாநாயகனாகவும், ரெஜினா, நந்திதா ஸ்வேதா, பாபிசிம்ஹா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பிரசன்னா படத் தொகுப்பில் உருவான இந்த படம் கடந்த 2016ம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகி விட்டது. சில பிரச்சனைகள் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருந்தது வருகிறது. இந்த திரைப்படத்தை பற்றிய முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தநிலையில் இந்த படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாகவும், அதன்பின் ஏப்ரல் மாதம் OTT-யிலும் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான 'மன்னவன் வந்தானடி' என்ற திரைப்படமும் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது செல்வராகவன் தனுஷ் நடிப்பில் இரண்டு படங்களும், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக் காகிதம் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

Similar News