படத்தின் இயக்குநரை கூப்பிட்டு கார் பரிசளித்த தயாரிப்பாளர்.. எந்த படம் தெரியுமா?

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் வெளிவந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இப்படத்தை இயக்கிய தயாரிப்பாளருக்கு தேசிங் பெரியசாமிக்கு கார் ஒன்று பரிசளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Update: 2021-03-05 14:19 GMT

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் வெளிவந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இப்படத்தை இயக்கிய தயாரிப்பாளருக்கு தேசிங் பெரியசாமிக்கு கார் ஒன்று பரிசளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இயக்குநர் தேசிங் பெரியசாமி இப்படத்தை இயக்கினார். இப்படத்தில் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்ததால் அனைவருக்கும் படத்தின் கதையம்சம் பிடித்திருந்தது. இப்படத்தை இயக்கியதற்காக ரசிகர்களை கொள்ளையடித்தார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. மேலும், இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டியிருந்தனர். இதனால் இப்படத்தை பலரும் திரையரங்கில் சென்று பார்த்தனர்.

இந்நிலையில், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' கடந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி திரைக்கு வந்தது. அதேபோன்று இப்படத்தில் நடித்த நடிகை நிரஞ்சனி, இயக்குநர் தேசிங் பெரியசாமியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், படம் வெளிவந்து ஒரு வருடம் நிறைவடைந்ததை தொடர்ந்து தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப், தேசிங் பெரியசாமிக்கு கார் பரிசாக அளித்து பாராட்டினார். மேலும் இந்த கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

Similar News