3000 சினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் யாஷ்.!

Update: 2021-06-02 07:10 GMT

பிரபல கன்னட நடிகர் யாஷ் 3000 சினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இது போன்ற சமயங்களில் அப்பாவி ஏழை மக்கள் மட்டுமின்றி தினக்கூலி செய்து வருபவர்கள் மிகப்பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.


 



இது போன்ற சமயங்களில் மத்திய, மாநில அரசுகள் உதவிகள் செய்து வந்தாலும், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், கன்னட நடிகர் யாஷ் ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்த தொகையை சினிமா தொழிலாளர்களுக்கு தலா ரூ.5,000 வீதம் பிரித்து வழங்கப்பட உள்ளதாம். நடிகர் யாஷின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News