இந்தி திரையுலகிற்கு 'கே.ஜி.எஃப் 2' பயம் காட்டிவிட்டது - ராம்கோபால் வர்மா

பாலிவுட் நடிகர்களுக்கு 'கே.ஜி.எஃப்'ஐ நினைத்து பயம் என சர்ச்சைக்கு பெயர் போன ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-29 11:48 GMT

பாலிவுட் நடிகர்களுக்கு 'கே.ஜி.எஃப்'ஐ நினைத்து பயம் என சர்ச்சைக்கு பெயர் போன ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.




அடிக்கடி சரியான வகையில் ஏதாவது கருத்து சொல்லி பரபரப்பு ஏற்படுத்தும் இயக்குனர் ராம்கோபால் வர்மா தற்போது மீண்டும் ஒரு பரபரப்பான கருத்துக் கூறியுள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியதாவது, 'சுதீப் சொல்வது மறுக்கமுடியாத அடிப்படை உண்மை 'கே.ஜி.எஃப் 2' கன்னட டப்பிங் திரைப்படம் தொடக்க நாளில் 50 கோடி வசூல் இருப்பதால் வடநாட்டில் நட்சத்திரங்கள் தென்னக நட்சதிரங்களை கண்டு பாதுகாப்பற்றவர்களாகவும், பொறாமை கொண்டும் இருக்கிறார்கள் வரும் ஹிந்திப் படங்களின் வசூலை நாம் பார்க்கத்தானே போகிறோம்' என கூறினார்.




முன்னதாக கன்னட நடிகர் சுதீப் மற்றும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஹிந்தி மொழி குறித்து காரசாரமாக விவாதம் செய்து பதிவிட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.

Similar News