தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை மரணம்.!

இந்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சுரேகா சிக்ரி. இவருக்கு சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். தற்போது அவருக்கு 75 வயதாகிறது.

Update: 2021-07-16 10:59 GMT

இந்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் சுரேகா சிக்ரி. இவருக்கு சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். தற்போது அவருக்கு 75 வயதாகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூளை பக்கம் வாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அதற்கு முன்பாக தொலைக்காட்சி தொடரின்போது கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் அவருக்கு மூளை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 


கடந்த 1988ம் ஆண்டு வெளியான 'தமஸ்' மற்றும் 1995ம் ஆண்டு வெளியான 'மம்மூ' என்ற படங்களில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

அது மட்டுமின்றி கடந்த 2008ம் ஆண்டு 'பாலிகா வாது' என்ற நிகழ்ச்சியில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான இந்தியன் டெலி விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News