'ராஜராஜசோழன் ஒரு அயோக்கியன்" என பா.ரஞ்சித் பேசிய வழக்கு இறுதி விசாரணையை எட்டியது !

Breaking News.

Update: 2021-09-02 10:15 GMT

"ராஜராஜ சோழன் ஒரு அயோக்கியன்" என இயக்குனர் பா.ரஞ்சித் பேசிய விவகாரம் தொடர்பாக வழக்கு இறுதி விசாரணையை எட்டியுள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் நடந்த விழா ஒன்றில் இயக்குனர் பா. ரஞ்சித், மன்னர் ராஜராஜ சோழனை பற்றி அவதூறாக பேசினார். "ராஜராஜ சோழன் ஒரு அயோக்கியன் அவன் ஆட்சி காலத்தில் தான் தலித் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்கிறார்கள். ஆனால் அவன் ஆட்சி காலம் இருண்ட காலம். அவன் ஆட்சிக் காலத்தில்தான் டெல்டா பகுதியில் சாதியக் கொடுமைகள் அதிகமாக நடைபெற்றது" என வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினார் இயக்குனர் பா.ரஞ்சித்.

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இதன் இறுதிகட்ட விசாரணை வருகிற 28ந் தேதிக்கு நீதிபதியால் தேதி குறிக்கப்பட்டுள்ளது.

Dinamalar

Tags:    

Similar News