பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல் பற்றி விமர்சனம்: சித்தார்த்திடம் போலீஸ் விசாரணை!

பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல் குறித்து ட்விட்டர் பதிவில் நடிகர் சித்தார்த் மிகவும் தரக்குறைவாக கருத்தை கூறியிருந்தார். இவரது கருத்துக்கு இந்தியா முழுவதும் விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் தேசிய மகளிர் அமைப்பு உள்ளிட்டவை கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.

Update: 2022-02-06 07:13 GMT

பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல் குறித்து ட்விட்டர் பதிவில் நடிகர் சித்தார்த் மிகவும் தரக்குறைவாக கருத்தை கூறியிருந்தார். இவரது கருத்துக்கு இந்தியா முழுவதும் விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் தேசிய மகளிர் அமைப்பு உள்ளிட்டவை கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.

அது மட்டுமின்றி சித்தாத்தை சிறையில் அடைக்க வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலித்தது. இதன் பின்னர் தெலங்கானா மாநிலத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் சித்தார்த்திடம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றனர். இந்த அறிக்கை தேசிய மகளிர் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது. விரைவில் மேல் நடவடிக்கை பாயலாம் என கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News