மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் தாதா சாஹேப் பால்கே விருது கிடைத்துள்ளது! நடிகர் ரஜினி!

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு உயர்ந்த விருதானா தாதா சாஹேப் பால்கே விருதினை மத்திய அரசு வழங்க உள்ளது.

Update: 2021-10-24 07:09 GMT

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு உயர்ந்த விருதானா தாதா சாஹேப் பால்கே விருதினை மத்திய அரசு வழங்க உள்ளது.

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது.


இரண்டாவது என்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய HOOTE என்கிற APPஐ உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும், விஷயங்களையும், இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் ''HOOTE APP '' மூலமாக பதிவிடலாம்... இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான ''HOOTE APP ''ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter Rajinikanth

Puthiyathalamurai

Tags:    

Similar News