'சலார்' அப்டேட் வரல நான் தற்கொலை செய்துகொள்வேன் - பிரபாஸின் கொலைவெறி ரசிகர் கடிதம்

பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தின் அப்டேட் வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ரசிகர் மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-16 13:30 GMT

பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தின் அப்டேட் வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ரசிகர் மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த படம் 'கே.ஜி.எப்', இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்தபடியாக பிரபாஸை வைத்து 'சலார்' என்ற படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.





இன்னிலை பிரபாஸின் தீவிர ரசிகர் ஒருவர் படத்தின் அப்டேட்டை இயக்குனர் பிரசாந்த் நீல், தயாரிப்பாளர் ஹோம்பெல் நிறுவனம் வெளியிடாவிட்டால் இந்த மாதம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'சமீபத்தில் வெளியான சாஹா, ராதே ஷியாம் ஆகிய படங்கள் தோல்வியால் நாங்கள் ஏற்கனவே அதீத வேதனையில் இருக்கிறோம். எனவே 'சலார்' படத்தின் டீசர் குறித்து மே மாதம் அறிவிப்பு வெளியிட வேண்டும்' என மிரட்டல் விடுக்கும் தோணியில் எழுதியுள்ளார்.

Similar News