வரி கட்டமாட்டேன் - மீண்டும் மேல்முறையீடு செய்யும் சூர்யா !

Kathir News.

Update: 2021-08-18 02:15 GMT

வரி விலக்கு தொடர்பான வழக்கில் மீண்டும் மேல் முறையீடு செய்யவிருக்கிறார் நடிகர் சூர்யா.


நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010 ம் ஆண்டு அக்டோபர் மாதம் வருமான வரி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 2007-2008 ம் ஆண்டு மற்றும் 2008-2009 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011 ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா தரப்பில் வரி விலக்கு கோரியும்,வருமான வரி தரப்பிலும் வரி செலுத்த கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஆனால் சூர்யா தாமதமாக தான் கணக்கை தாக்கல் செய்தார் எனவும், வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும், வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லையென வருமான வரி தரப்பில் வாதிடப்பட்டது. வருமானவரித்துறையின் இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கு பற்றி சூர்யா தரப்பு சார்பில் ராஜ்சேகர் பாண்டியன் விளக்கமளித்துள்ளார். அதில் வரியும், வரிக்கான வட்டியும் முறையாக செலுத்தி வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். இன்றைய நாள் வரை நாங்கள் எந்த வரி பாக்கியும் வைக்கவில்லை, வழக்கானது வருமான வரிக்கான வட்டியை திரும்ப பெறுவதற்கானது மட்டுமே. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளோம் என விளக்கம் அளித்துள்ளார்.


Source - Malai malar

Tags:    

Similar News