திருக்குறள்'தான் காரணமே 'பேர் வச்சாலும்' பாடல் உருவாக - இசைஞானி பகிர்ந்த நினைவு !

Cinema News.

Update: 2021-09-21 10:45 GMT

'பேர் வச்சாலும், வைக்காம போனாலும் போகாது மல்லி வாசம்' என்ற பாடல் 30 வருடங்களுக்கு முன் உருவாட கதையை தற்பொழுது இளையராஜா பகிர்ந்துள்ளார்.




 


வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படத்தில் இளையராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக 'பேரு வச்சாலும் வைக்காம போனாலும்...' என்ற பாடல் மிகவும் பிரபலம். இப்பாடலை மீண்டும் சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடலில் நடனம் ஆடிய அனகா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி விட்டார்.




 


இந்நிலையில் இந்த பாடல் எப்படி உருவானது என்பதற்கான சுவாரஸ்யமான விளக்கத்தை கொடுத்துள்ளார் இளையராஜா. இப்பாடலுக்கான மெட்டை வாலியுடம் கூறிய போது, இது என்னயா மெட்டு, இதற்கு எப்படி பாடல் எழுதுவது எனக்கேட்டார். அதற்கு 'துப்பார்க்கு துப்பாய' குறள் மூலம் வள்ளுவர் ஏற்கனவே இப்பாடலை எழுதிவிட்டார் எனக்கூறினேன். அதன் பின்னரே இப்பாடல் இந்த மெட்டில் உருவானது என இளையராஜா கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News