'பொன்னியின் செல்வனி'ல் காட்சிகள் திருப்தி தரவில்லையா? மீண்டும் படப்பிடிப்பா?

'பொன்னியின் செல்வன்' படத்தின் சில காட்சிகள் திருப்பி அளிக்காத காரணத்தினால் இயக்குனர் மணிரத்தினம் மீண்டும் மறு படப்பிடிப்பு செய்கிறார் என்ற தகவல் குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Update: 2022-05-22 10:27 GMT

'பொன்னியின் செல்வன்' படத்தின் சில காட்சிகள் திருப்பி அளிக்காத காரணத்தினால் இயக்குனர் மணிரத்தினம் மீண்டும் மறு படப்பிடிப்பு செய்கிறார் என்ற தகவல் குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.




இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் 'பொன்னியின் செல்வன்', அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'பொன்னியின் செல்வன்' புதினத்தை படமாக எடுத்து வருகிறார் இயக்குனர் மணிரத்னம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.



இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் படமாக்கப்பட்ட சில காட்சிகள் திருப்பி தரவில்லை என்பதால் மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் பரவியது. இந்த தகவல் குறித்து படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது இறுதிகட்ட பணிகள் மட்டுமே நடந்து வருவதாகவும் படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Similar News