சொன்னதை செய்யும் மத்திய அரசு : சமையல் எண்ணெய்கள் மீதான வரி குறைப்பு ! - தமிழகத்தில் ரூ 10 வரை அதிரடியாக குறைந்த விலை!

சமையல் எண்ணெய்கள் மீதான வரிகளை குறைத்தது மத்திய அரசு

Update: 2021-11-06 01:15 GMT

சமையல் எண்ணெய்கள் மீதான வரிகளை மத்திய அரசு குறைத்ததுள்ளதால் ரூ 10 வரை தமிழகத்தில் விலைகள் குறைந்துள்ளன. மேலும் கச்சா பனை எண்ணெய், சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான அடிப்படைத் தீர்வை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரியை 2.5 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாக மத்திய அரசு குறைத்துள்ளது.

இந்த எண்ணெய்களின் மீதான வேளாண் செஸ், கச்சா பாமாயிலுக்கு 20 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதம் ஆகவும், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கு 5 சதவீதமாகவும் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட குறைப்பின் விளைவாக, கச்சா பாமாயிலுக்கு 7.5 சதவீதம் மற்றும் கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கு 5 சதவீதம் மொத்த வரி விதிக்கப்படுகிறது. ஆர்பிடி பாமோலின் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரி 32.5 சதவீதத்தில் இருந்து 17.5 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்படுவதற்கு முன், அனைத்து வகையான கச்சா சமையல் எண்ணெய்கள் மீதான வேளாண் உள்கட்டமைப்பு செஸ் 20 சதவீதம் ஆக இருந்தது. குறைக்கப்பட்ட பிறகு, கச்சா பாமாயில் மீதான வரி 8.25 சதவீதம் ஆகவும், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி தலா 5.5 சதவீதம் ஆகவும் இருக்கும்.

சமையல் எண்ணெய்களின் விலைகளைக் கட்டுப்படுத்த பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் மீதான இறக்குமதி வரிகளை அரசு குறைத்துள்ளது. கடுகு எண்ணெயின் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் ஒரு கிலோவுக்கு ரூ 10 வரை சமையல் எண்ணெய்களின் விலைகள் குறைந்துள்ளன.




Tags:    

Similar News