கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொருளாதார அதாள பாதாளத்திற்கு சென்று வருவதால் இலங்கை இந்தியாவிடம் ரூ.73 ஆயிரம் கோடி கடன் கேட்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை நாடு சுற்றுலாவை நம்பியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துவிட்டது. இதனால் கடுமையாக பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. விலைவாசிகள் தாறுமாறாக உயர்ந்துவிட்டது.
இதில் இருந்து தப்பிக்க இந்தியாவிடம் ரூ.73 ஆயிரம் கோடி கடன் உதவியை கோருவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை அந்நாடு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Dinamalar
Image Courtesy:The Week