திருப்பதி ஏழுமலையானை பிப்ரவரி மாதம் தரிசனம் செய்ய நாளை முதல் டிக்கெட்டுகள் விநியோகம்

Update: 2022-01-27 11:45 GMT

திருமலை திருப்பதியில் பிப்ரவரி மாத தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்படுகிறது


திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம் செய்வதற்கான பிப்ரவரி மாதம் 300 ரூபாய் டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணி முதல் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள அறிக்கையில், "பிப்ரவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன சிறப்பு நுழைவு சீட்டுகள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் என 28'ம் தேதி அதாவது நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் இணையத்தில் வெளியிடப்படுகிறது, நாளை மறுநாள் சனிக்கிழமை முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது' என குறிப்பிட்டுள்ளது.


எனவே திருமலை திருப்பதி வர விரும்பும் பக்தர்கள் இதில் பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி அவர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது கடந்த வாரமே திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Similar News