விரைவில் ஏழுமலையான் நேரடி தரிசனத்திற்கு அனுமதி - வரப்போகும் சூப்பர் அறிவிப்பு

Update: 2022-02-06 01:45 GMT

திருப்பதியில் வரும் 15ஆம் தேதி முதல் இலவச தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் நேரடியாக வழங்க ஏற்பாடு செய்யவுள்ளதாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தற்பொழுது திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய  ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து செல்லமுடியும், நேரடியாக டிக்கெட் முன்பதிவு இல்லாமல் செல்லும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். இதுகுறித்த தகவலால் நிறைய பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய இயலாது தவித்து வந்தனர், ஆன்லைனில் குறைந்த அளவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன இந்நிலையில் நேரடியாக டிக்கெட்டுகள் வழங்குவது எப்பொழுது என்ற ஆர்வம் பக்தர்களிடையே அதிக அளவில் இருந்து வந்தது.


தற்பொழுது நேரடியாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் டிக்கெட்டை வழங்குவது குறித்து திருமலா திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி கூறியதாவது, "கொரோனா குறைந்து வருவதால் வரும் 15'ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது" எனக் கூறியுள்ளார் எனவே நேரடியாக டிக்கெட் வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.



Source - Maalai malar

Similar News