உக்ரைனில் ஒலிக்கும் வந்தே மாதிரம்! பாரத் மாதா கி ஜே!

Update: 2022-02-26 13:48 GMT

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்து வருகிறது. இதனால் அங்கு எங்கு பார்த்தாலும் மக்களின் அழுகை குரல் மட்டுமே கேட்டு வருகிறது. அங்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் உட்பட பலர் சிக்கியிருக்கின்றனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

இதற்காக அண்டை நாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முகாமிட்டு உக்ரைனில் இருந்து தரைவழியாக அழைத்து வரும் மாணவர்களை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய மாணவர்கள் பலர் உக்ரைனில் இருந்து ஹங்கேரிக்கு தரை மார்க்கமாக அழைத்து செல்லப்பட்டனர். அப்போது பேருந்தில் இருந்த மாணவர்கள் ஜெய்ஹிந்த் மற்றும் வந்தே மாதரம் என்ற முழக்கங்களை எழுப்பி உற்சாகப்படுத்தினர். அயல்நாட்டிலும் இந்தியர்களின் தேச ஒற்றுமை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News