"உங்களுக்கு இரக்கமே இல்லையா? இப்படி அடிச்சுக்குறீங்களேப்பா" - தாலிபன்களின் இரக்கம்

Update: 2022-02-26 13:15 GMT

இருநாடுகளும் அமைதியான முறையில் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என தாலிபன்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் ரஷ்யா போர் ஆதிக்கம் நடத்தி வருகிறது, இதுவரை 130'க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நடவடிக்கையால் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன, மேலும் பல நாடுகளில் வாழும் தங்கள் மக்களை மீட்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் எமிரேட்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், "நடந்து வரும் பொது சூழல்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், மேலும் உயிரிழப்புகள் குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம். வன்முறையை அதிகப்படுத்தக்கூடிய நிலைப்பாட்டை மேற்கொள்ளும் அனைத்து தரப்பினரும் தங்கள் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஒரு சூழலை அமைதியான முறையில் தீர்க்க இரு நாடுகள் பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும்" என தெரிவித்துள்ளது.

Source - Junior Vikatan

Similar News