அறநிலையத்துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான வழக்கு - நீதிமன்றம் கூறியது என்ன?
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அறநிலையத்துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அந்த வழக்கின் விசாரணையின்போது அறங்காவலர்கள் உள்ள கோவில்களில் அவர்கள் மூலமாகவே அர்ச்சகர்கள் நியமிக்க படுவதாகவும் அறங்காவலர்கள் இல்லையெனில் தக்கர்கள் மூலமாக நியமிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்று நீதிபதிகள் அர்ச்சகர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.