ஈரான் எண்ணெய் கப்பல்கள் பறிமுதல்!! இந்திய கடலோர காவல்படையின் நடவடிக்கை!!

Update: 2026-02-17 12:19 GMT

அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது. ஸ்டெல்லர் ரூபி, அஸ்பால்ட் ஸ்டார், அல் ஜாஃப்சியா என்ற பெயர்களைக் கொண்ட இந்த கப்பல்கள் மும்பை கடற்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டன.


இந்த கப்பல்கள் சட்டவிரோதமாக இந்திய கடற்பகுதியில் நுழைந்து, ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு பொருட்களை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்திய கடலோர காவல்படை தனது ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.


ஈரான் அரசு, பறிமுதல் செய்யப்பட்ட கப்பல்களுக்கும் தங்கள் நாட்டின் தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்தியா-அமெரிக்கா உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைத் தொடர்ந்து பறிமுதல் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News