தி.மு.க-வின் வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே!!
தி.மு.க அரசின் ஐந்தாண்டு ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது அடுத்த தேர்தலுக்கான அறிக்கையை தயார் செய்யும் பணிகள் நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க அரசு அளித்த வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து மக்கள் பேசிவருகின்றனர்.
கல்விக்கடன் ரத்து, மடிக்கணினி வழங்கல் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மாணவர்களுக்கு 'டேப்' வழங்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நெல், கரும்பு விலை உயர்வு வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
பெண்களுக்கு 25% மானியத்துடன் கூடிய கடன், ஏழைப் பெண்களுக்கு ₹50,000 வட்டியற்ற சிறுதொழில் கடன் எனச் சொன்ன எதையும் தி.மு.க செய்யவில்லை. 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு அரசு வேலை, பாலியல் குற்றங்களுக்குத் தனி நீதிமன்றம் போன்ற வாக்குறுதிகளும் கண்டுகொள்ளவில்லை.
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஏமாற்றும் ஒன்றாக மட்டும் கூறுவதாக தெரிகிறது. இப்போது 2026 தேர்தலுக்காக ₹8,000 கூப்பன் வழங்கப்படும் என்ற புதிய வாக்குறுதியை முன்வைக்கிறார்கள். பழைய வாக்குறுதிகளையே நிறைவேற்றாதவர்கள், இந்தத் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவர்கள் என கேள்வி எழுந்துவருகிறது.