யுபிஐ பரிமாற்றங்களுக்கு ரூபாய் 1500 கோடி, பால் உற்பத்தியை அதிகரிக்க ரூபாய் 6190 கோடி -மத்திய மந்திரி சபை ஒப்புதல்!

பால்உற்பத்தியை அதிகரிக்க திட்டங்களுக்கான செலவினத்தை ரூ. 6190 கோடியாக அதிகரிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.;

Update: 2025-03-21 12:15 GMT
யுபிஐ பரிமாற்றங்களுக்கு ரூபாய் 1500 கோடி, பால் உற்பத்தியை அதிகரிக்க ரூபாய் 6190 கோடி -மத்திய மந்திரி சபை ஒப்புதல்!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் முக்கியமாக பால் உற்பத்தி அதிகரிப்பதற்காக மாற்றியமைக்கப்பட்ட ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் மற்றும் தேசிய பண்ணை மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கானது செலவினத்தை ரூபாய் 6190 கோடியாக அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி 2021-22 முதல் 2025 26 ஆம் ஆண்டு வரையிலான 15-வது நிதி குழு காலத்தில் ராஷ்டிரிய கோகுல் மிஷனுக்கான நிதியில் மேலும் ஆயிரம் கோடி உயர்த்தி ரூபாய் 3400 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. இதே போல தேசிய பண்ணை மேம்பாட்டு திட்டத்திலும் ₹ 1000 கோடி அதிகரித்து ரூபாய் 2,790 கோடியாக உயர்த்தப்பட்டது.

மேற்படி இரண்டு திட்டங்களால் பண்ணை உள்கட்டமைப்புகள் நவீனப்படுத்தி விரிவுபடுத்தப்படும. ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் மற்றும் அரசின் பிற திட்டங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் பால் 63.55 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் உற்பத்தி திறன் 26.34% அதிகரித்து வருகிறது. மேலும் குறைந்த மதிப்பில் ஆன யுபிஐ பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்காக 2024 25ஆம் தேதி ஆண்டு சுமார் 1500 கோடி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு மந்திரி சபை தனது ஒப்புதலை வழங்கியது.

அதன்படி சிறு வணிகர் ஒருவருக்கு தனிநபர் ஒருவர் யுபிஐ மூலம் இரண்டாயிரத்துக்கு கீழே பரிமாற்றம் செய்யும்போது இந்த ஊக்கத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும். பரிமாற்றத்தின் போது தொகையின் மதிப்பில் 0.15% ஊக்கத் தொகையாக வழங்கப்படும். சிறு வணிகர்களுக்கு ரூபாய் 2000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும்.மராட்டியத்தின் ஜெ.என்.பி ஏ துறைமுகம் முதல் சவுக்கு வரையிலான 29.219 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூபாய் 4500.62 கோடியில் ஆறு வழி அதிவேக பசுமை நெடுஞ்சாலை அமைக்கவும் மத்திய சபையில் ஒப்புதல் பெறப்பட்டது. 

துறைமுகத்தில் அதிகரித்து வரும் கண்டெய்னர்களை கையாளும் திறன் மற்றும் நவிமும்பை சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இணைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற கோஷம் எழுந்துள்ளது. அதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கு மந்திரி சபை தனது ஒப்புதலை வழங்குகிறது. இதைப்போல அசாமில் ரூபாய் 10601.4 கோடியில் யூரியா ஒரு ஆலை தொடங்குவதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.இந்த ஆளை மூலம் ஆண்டுக்கு 12.7 லட்சம் டன் கூறிய உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.யூரியா இறக்குமதியை குறைக்கவும் உர உற்பத்தியில் தற்சார்பை எட்டவும் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த தகவல்களை மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 


Similar News