அக்டோபர் 22 முதல் 23 வரை ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

Update: 2024-10-18 14:28 GMT

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22-23 வரை கசானில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டின் பதினாறாவது பதிப்பில் பங்கேற்க ரஷ்யா செல்கிறார்.

இந்த ஆண்டில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். முன்னதாக ரஷ்யா-இந்தியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த ஆண்டு ஜூலை மாதம் ரஷ்யா சென்றார்.

செப்டம்பரில், ரஷ்ய ஜனாதிபதி புடின் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார், அக்டோபர் 22 அன்று கசானில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இருதரப்பு சந்திப்பை முன்மொழிந்தார். இந்த அழைப்பின் போது பிரதமர் மோடியை "நல்ல நண்பர்" என்று அதிபர் புதின் வர்ணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த உச்சிமாநாட்டில் உலகளாவிய மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளில் நடைபெறும். முக்கிய உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க தலைவர்களுக்கு ஒரு முக்கியமான தளத்தை வழங்கும் என்று வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் பிரிக்ஸ் மூலம் தொடங்கப்பட்ட முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும் எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியமான பகுதிகளை அடையாளம் காண்பதற்கும் உச்சிமாநாடு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது. 

பிரதமர் தனது பயணத்தின் போது, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்கள் மற்றும் ரஷ்யாவின் கசானில் அழைக்கப்பட்ட தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News