கொல்கத்தாவில் ரூ.5,200 கோடிக்கு மேல் மேம்பாட்டுத் திட்டங்கள்: தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Update: 2025-08-23 16:46 GMT

பிரதமர் மோடி மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் ரூ.5,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்தார், மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறினார். நோபராவிலிருந்து ஜெய்ஹிந்த் விமான நிலையம் வரையிலான கொல்கத்தா மெட்ரோ ரயில் பயணத்தின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட மோடி, இந்தப் பயணத்தின் போது, பல்வேறு சக ஊழியர்களுடன் கலந்துரையாடியதாகவும், கொல்கத்தாவின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் நவீனமயமாக்கல் குறித்து அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். ஆறு வழி கோனா உயர்மட்ட விரைவுச் சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டங்களுக்காக, கொல்கத்தா மக்களுக்கும் மேற்கு வங்கத்தின் அனைத்து மக்களுக்கும் அவர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். 


கொல்கத்தா போன்ற நகரங்கள் இந்தியாவின் வரலாறு மற்றும் அதன் எதிர்காலத்தின் வளமான உருவகமாகும். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி முன்னேறும்போது, டம் டம் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று திரு. மோடி கூறினார். இன்றைய திட்டத்தின் நிகழ்வு நவீன இந்தியா அதன் நகர்ப்புற நிலப்பரப்பை எவ்வாறு மாற்றுகிறது என்பதற்கு ஒரு சான்றாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். மின்சார சார்ஜிங் முனையங்கள் மற்றும் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பசுமை இயக்கத்தை ஊக்குவிக்க இந்திய நகரங்கள் முழுவதும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், 'கழிவுகளிலிருந்து செல்வம்' முயற்சியின் கீழ், நகரங்கள் இப்போது நகர்ப்புற கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். மெட்ரோ சேவைகள் விரிவடைந்து வருவதையும், மெட்ரோ வலையமைப்புகள் விரிவுபடுத்தப்படுவதையும் எடுத்துரைத்த திரு. மோடி, இந்தியா தற்போது உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ வலையமைப்பைக் கொண்டிருப்பதில் பெருமிதம் தெரிவித்தார். 2014- க்கு முன்பு, நாட்டில் 250 கிலோமீட்டர் மெட்ரோ வழித்தடங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று, இந்தியாவில் மெட்ரோ கட்டமைப்பு 1,000 கிலோமீட்டருக்கும் மேல் விரைவாக விரிவடைந்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். கொல்கத்தாவும் அதன் மெட்ரோ அமைப்பின் தொடர்ச்சியான விரிவாக்கத்தைக் கண்டுள்ளது என்று அவர் கூறினார்.

கொல்கத்தாவின் மெட்ரோ ரயில் கட்டமைப்பில் சுமார் 14 கிலோமீட்டர் புதிய பாதைகள் சேர்க்கப் படுவதாகவும், ஏழு புதிய நிலையங்கள் கொல்கத்தா மெட்ரோவுடன் ஒருங்கிணைக்கப் படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்த வளர்ச்சிகள் அனைத்தும் கொல்கத்தா மக்களின் வாழ்க்கை வசதியையும் பயண வசதியையும் மேம்படுத்தும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.

Similar News