பொது சிவில் சட்டம்!! ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து!!
By : G Pradeep
Update: 2026-02-25 08:56 GMT
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாடு முழுக்க பொது சிவில் சட்டம் அமல்படுத்தணும்னு சொல்லியிருக்காரு. உத்தராகண்ட்டில் அமல்படுத்திய மாதிரி நாடு முழுக்க அமல்படுத்தணும்னு சொல்றாரு.
உத்தராகண்ட்டில் கடந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமாக உத்தராகண்ட் உள்ளது.
வரைவு பொது சிவில் சட்டம் உத்தராகண்ட்டில் பொது விவாதத்துக்கு கொண்டுவரப்பட்டு, 3 லட்சம் மக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. அவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டனன்னு மோகன் பாகவத் சொல்றாரு.
நாடு சுதந்திரமாக இருந்தாலும் சுதந்திரத்தைப் பாதுகாக்க பாதுகாப்புப் படைகள் எப்போதும் தேவைன்னு சொல்லி, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் ஆர்எஸ்எஸ் முகாம்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.