புத்தாண்டை முன்னிட்டு கல்லா கட்டிய டாஸ்மாக் கடைகள் - சென்ற ஆண்டைவிட மது விற்பனை அதிகம்

புத்தாண்டு தினத்தை ஒட்டி திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ரூபாய் ஒரு கோடியே 92 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-01-03 07:15 GMT

திருவாரூர் மாவட்டத்தில் 109 டாஸ்மாக் கடைகள் உள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் மதிப்பிலான மது விற்பனை செய்யப்படும். இதில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக ஆங்கில புத்தாண்டு பிறப்பை மது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வதால் மது விற்பனை அதிகமாக நடைபெறும். அதன்படி 2023 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்ததை ஒட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை பல மடங்கு அதிகரித்தது.


மது ரசிகர்களின் உற்சாகத்தினால் மது, பீர் வகைகள் என மொத்தம் 1 கோடி 92 லட்சம் மதிப்பிலான மது வகைகள் விற்பனையானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை குறைந்துள்ளது. எந்த பண்டிகை நிகழ்ச்சி ஆனாலும் போதை ஆர்வத்தால் மது விற்பனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு 2 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.





 


Similar News