விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 71 ஆயிரம் கோடி - அசத்தும் மத்திய அரசு!

சம்பவர் நெல் கொள்முதல் மேலும் விவசாயிகளுக்கு ரூபாய் 1,71,000 கோடி வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-06-22 05:15 GMT

2022-  23ஆம் ஆண்டு சம்பா பருவ நெல் கொள்முதலை மத்திய அரசு சீராக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19 -6 -2023 வரை 830 லட்சம் டன் நெல் மத்திய தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது . இந்த கொள்முதலில் இதுவரை 1.22 கோடி விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.


இவர்களுக்கு மத்திய அரசு1,75,000 கோடி குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கி உள்ளது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு இருக்கிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு எதிராக அரிசி விநியோகமும் நடைபெற்று வருகிறது. இதே போல கோதுமை கொள்முதலும் சீராக நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Similar News