இந்தியா - நேபாளம் எல்லையில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி; இரண்டு பேர் படுகாயம்!

இந்தியா - நேபாளம் எல்லையில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி; இரண்டு பேர் படுகாயம்!

Update: 2020-06-12 10:56 GMT

பீகார் மாநிலத்தில் இருக்கும் நேபாளம் எல்லை பகுதியில் உள்ள சிதமார்ஹி என்ற பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்தியா பெண் ஒருவர் பலியாகி உள்ளார் மற்றும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேபாள நாட்டின் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உள்ளூர் பெண் கொல்லப்பட்டார் மற்றும் 2 பேர் படுகாயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பதற்றத்தை பற்றி சசாஸ்திர சீமா பாலின் பாட்னா எல்லைப்புற இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) சஞ்சய் குமார் கூறியது: இந்த மோதல் உள்ளூரில் இருக்கும் மக்களுக்கும் மற்றும் நேபாள மாநிலத்தின் ஆயுத படை காவல்துறையினருக்கும் (ஏபிஎஃப்) இடையே நடைபெற்றுள்ளது.

சர்வதேச எல்லையில் இருக்கும் பகுதியை அணுகியதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மேலும், இருவர்க்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: Daily Thanthi

Similar News