மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவேன் - வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்!

மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவேன் - வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்!

Update: 2020-06-22 11:47 GMT

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி என்னுடைய திறமையை நிரூபித்து விட்டு மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவேன் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இவர் இதுவரை இந்தியாவுக்காக இவர் இவர் இந்தியாவில் இதுவரை 28 டெஸ்ட், 53 ஒரு நாள், 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்சிங் ஈடுபட்ட ஸ்ரீசாந்த்துக்கு ஏழு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்தன. இவருடைய இந்த ஏழு ஆண்டு வரும் செப்டம்பர் மாதம் முடிகிறது. தற்போது ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைப்பற்றி ஸ்ரீசாந்த் கூறியது: "இந்த ஊரடங்கு சமயத்தில் என் பி.ஏ கூடைப்பந்து பயிற்சியாளர் டிஎம் குரோவர் ஆன்லைன் மூலம் நடத்தும் மனவலிமை பயிற்சி கலந்து கொண்டு வருகிறேன். பின்பு தினமும் எர்ணாகுளத்தில் உள்ள உள்ளரங்கு பயிற்சி கூடத்தில் இளம் கேரளா அணி வீரர்களுடன் வலைப்பயிற்சியில் விளையாடி வருகிறேன்.

மேலும், இந்த ஆண்டு நடைபெற உள்ள ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட காத்துக்கொண்டி வருகிறேன். இந்த போட்டியில் என்னுடைய திறமையை நிரூபித்து விட்டு. அடுத்த ஆண்டு ஐபிஎல் வீரர்களை ஏலத்தில் எடுப்பதில் கலந்து கொண்டு ஏதாவது ஒரு அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் ஐபிஎல் போட்டியை விளையாடுவேன் என நம்பிக்கை இருக்கிறது. எந்த இடத்தில் இருந் வெளியேறினானோ அதே இடத்தில் என்னுடைய தடத்தை பதிப்பேன்."

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.  

Similar News