பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்று கண்ணிவெடியில் கால் வைத்து வெடித்து சிதறிய தீவிரவாதிகள்

காஷ்மீரில் பாக்கிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Update: 2022-08-24 11:00 GMT

காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் சிலர் நேற்று முன்தினம் இரவு ஊடுருவ முயன்றனர். இரவு 10 மணி அளவில் அந்த பயங்கரவாதிகளில் ஒருவர் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை மிதித்ததில் வெடித்தது. இந்நிலையில் அந்தபகுதியில் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டத்தை அறிந்த ராணுவத்தினர் நேற்று காலை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினார். அப்போது ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


அப்பகுதி மேலும் அலசப்பட்டு வருவதாக ராணுவம் தெரிவித்தது. பாகிஸ்தான் ராணுவத்தில் முன்பு வேலை பார்த்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் வழிகாட்டியாக இருந்தவர் காயமடைந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து நடந்திருக்கிறது. பஞ்சாப் பகுதியில் உள்ள இந்திய பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர்.

அப்போது ஆறு தோட்டா கொள்கலன்களுடன்  3 ஏ.கே வகை துப்பாக்கிகள், 4 தோட்டா கொள்கலன்களுடன் இரண்டு எம். 3 எந்திரத் துப்பாக்கிகள் இரண்டு தோட்டா கொள்கலன்களுடன்இரண்டு கைத்துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. அந்த ஆயுதங்கள் பாகிஸ்தானிலிருந்து இந்திய பகுதிக்கு கடத்தி வரப்பட்டதாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.





 


Similar News