சிகிச்சையின் போது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - 70 வயது டாக்டர்.ஜபருல்லாகான் குறும்பு!

ராமநாதபுரத்தில் சிகிச்சைக்காக சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த 70 டாக்டர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-10-06 16:45 GMT

ராமநாதபுரம் சேதுபதி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ஜபருல்லாகான். இவர் ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரின் கிளினிக்கிற்கு 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.சிகிச்சையின் போது அவருக்கு டாக்டர் ஜபருல்லாகான் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தன் தாயாரிடம் கூறியதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி அடித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜபருல்லாகானை கைது செய்தனர்.


இதை தொடர்ந்து அவரை ராமநாதபுரம் கோர்ட்டில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் ஆஜர் படுத்தினார். அப்போது டாக்டர் ஜபருல்லாகான் திடீரென கோர்ட்டில் மயங்கி விழுந்தார். அதை தொடர்ந்து அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து போலீஸ் காவலில் சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.





 


Similar News